புரிந்து வழ்வாய் என நினைத்தேனே, பிரிந்து ஏன் சென்றாயடி?
வலி இருப்பின் - வழி கொடுத்தேன்
அன்பு இருப்பின் - அதை மறைத்தேன்
நீங்காத உன் நினைவில்,
தூங்காத என் இமை
காணாத உன் உருவம்,
கனமானது என் இதயம்
போகும் இடமெல்லாம்,
கண் தேடியது உனைதானே
உன் சாபம் பலித்ததடி,
என் நெஞ்சம் துடித்ததடி
நீ வருவாய் மீண்டும்,
நம்பியது என் மனம்
காதலில் மரணம் கடந்துவிட முடியும்!
காதலில் பிரிவு கடப்பது கடினம்!
காதல் என்றும் அருமையோ அருமை!
காதலில் பிரிவு கொடுமையோ கொடுமை!
கைகோர்த்து வாழ்வது மட்டுமே காதலா?
விலகி நின்று வாழ விடுவதும் வாழ்த்துவதும் காதலே!
